மாம் ஹி பா1ர்த2 வ்யபா1ஶ்ரித்1ய யே‌பி1 ஸ்யு: பா1பயோனய: |

ஸ்த்1ரியோ வைஶ்யாஸ்த1தா2 ஶூத்3ராஸ்தே1‌பி1 யான்தி11ராம் க3தி1ம் ||32||

மாம்——என்னை; ஹி——நிச்சயமாக; பார்த——ப்ரிதாவின் மகன் அர்ஜுனன்; வ்யாபாஶ்ரித்ய——அடைக்கலம் அடைபவர்கள்; யே——யார்; அபி——கூட; ஸ்யுஹு——இருந்தாலும்; பாப யோனயஹ——தாழ்ந்த பிறவி; ஸ்த்ரியஹ——பெண்கள்; வைஶ்யாஹா——வணிக மக்கள்; ததா——மற்றும்; ஶூத்ராஹா——கை வேலை செய்பவர்கள்; தே அபி——அவர்களும் கூட; யாந்தி——செல்வர்; பராம் —உயர்ந்த; கதிம்——நிலையை

అనువాదం

BG 9.32: என்னிடத்தில் அடைக்கலம் புகுபவர்கள் அனைவரும், அவர்களின் பிறப்பு, இனம், பாலினம் அல்லது ஜாதி எதுவாக இருந்தாலும், சமூகம் இகழ்ந்தாலும் கூட, உயர்ந்த நிலையை அடைவார்கள்.

వ్యాఖ్యానం

குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல விழுமியங்களையும், நல்லொழுக்க வாழ்வையும் கற்ற புண்ணிய குடும்பங்களில் பிறக்கும் பாக்கியம் பெற்ற ஆன்மாக்கள் உண்டு. கடந்த ஜென்மத்தில் அவர்கள் செய்த நல்ல செயல்களின் விளைவு இதுவாகும். பிறகு, குடிகாரர்கள், குற்றவாளிகள், சூதாடிகள் மற்றும் நாத்திகர்களின் குடும்பத்தில் பிறக்கும் துரதிர்ஷ்டம் உள்ள ஆத்மாக்களும் உள்ளன. இதுவும் கடந்த ஜென்மத்தில் செய்த பாவங்களின் விளைவுதான்.

இங்கு, ஸ்ரீ கிருஷ்ணர், பிறப்பு, பாலினம், ஜாதி, இனம் எதுவாக இருந்தாலும், தன்னிடம் பூரணமாக அடைக்கலம் கொள்பவர் பரலோகத்தை அடைவார் என்று கூறுகிறார். பக்தி மார்க்கத்தின் மகத்துவம் என்னவென்றால், அதற்கு அனைவரும் தகுதியுடையவர்கள், மற்ற பாதைகளில், கடுமையான நிபந்தனைகள் உள்ளன.

ஞான யோகத்தின் பாதைக்கு, ஜகத்குரு சங்கராச்சரியார் தகுதியைக் கூறுகிறார்:

விவேகி1னோ விரக்11ஸ்ய ஶாமாதி1கு3ண ஶாலினஹ

முகு1க்ஷோரைவ ஹி ப்3ரஹ்ம ஜிஞாஸா யோக்3யதா1 மதா1ஹா

'பாகுபாடு, பற்றின்மை, ஒழுக்கமான மனம் மற்றும் புலன்கள் மற்றும் பரமநிவர்த்திக்காக தீவிரமான ஆவல் ஆகிய நான்கு தகுதிகளைக் கொண்டவர்கள் மட்டுமே ஞான யோகப் பாதையைப் பயிற்சி செய்யத் தகுதியுடையவர்கள்.'

கர்ம காண்டத்தின் (வேத சடங்குகள்) பாதையில், பூர்த்தி செய்ய வேண்டிய ஆறு நிபந்தனைகள் உள்ளன:

தே3ஶே கா1லே உபா1யேன த்3ரவியம் ஶ்ரத்3தா4 ஸமன்வித1ம்

பா1த்1ரே ப்1ரதீ3யதே1 யத்11த்1 ஸக1லம் த4ர்ம லக்ஷணம்.

‘சம்பிரதாயச் செயல்களின் பலனைப் பெறுவதற்கு ஆறு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - சரியான இடம், சரியான நேரம், சரியான முறை மற்றும் மந்திரங்களின் சரியான விளக்கக் கூற்று, தூய பொருட்களைப் பயன்படுத்துதல், யாகம் செய்யும் தகுதியுள்ள பிராமணர், மற்றும் அதன் பலனில் உறுதியான நம்பிக்கை.’

அஷ்டாங்க யோகத்தின் பாதையிலும், கடுமையான விதிமுறைகள் உள்ளன:

ஶௌசௌ1 தே1ஶே ப்1ரதி1ஷ்டாப்1ய (பா43வத1ம் 3.28.8)

‘சரியான ஆசனத்தில் அசையாமல் அமர்ந்து தூய்மையான இடத்தில் ஹட யோகம் செய்யுங்கள்.’

இதற்கு நேர்மாறாக, பக்தி யோகம் என்பது யாராலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும், சூழ்நிலையிலும், எந்தப் பொருளைக் கொண்டும் செய்ய முடியும்.

ந தே3ஶா நியமஸ்த1ஸ்மின் ந கா1ல நியமஸ்த1தா2

(பத்3ம பு1ராணம்)

நாம் பக்தி செய்யும் நேரம அல்லது இடம் பற்றி கடவுள் கவலைப்படுவதில்லை என்று இந்த வசனம் கூறுகிறது. அவர் நம் இதயத்தில் உள்ள அன்பை மட்டுமே பார்க்கிறார். எல்லா ஆத்மாக்களும் கடவுளின் குழந்தைகள், அவர்கள் உண்மையான அன்புடன் அவரிடம் வந்தால், அனைவரையும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ள அவர் தயாராக இருக்கிறார்.

Bookmark this Verse

Sign in to save your favorite verses.

Add a Note
Swami Mukundananda
9. ராஜா வித்யா யோகம்

ఏ శ్లోకానికైనా వెంటనే వెళ్లండి

మీరు వెతుకుతున్న జ్ఞానానికి నేరుగా వెళ్లండి

Book with feather

మీ స్వంత గీతను పొందండి

Bhagavad Gita — The Song of God భగవద్గీత
The Song of God
Order Now
Bhagavad Gita for Everyday Living Bhagavad Gita for
Everyday Living
Order Now

మాతో అనుసంధానంలో ఉండండి!

రోజు శ్లోకం

పవిత్ర భగవద్గీత యొక్క శాశ్వత ప్రేరణాత్మక జ్ఞానంతో మీ రోజును ప్రారంభించండి; అది నేరుగా మీ ఇమెయిల్‌కు చేరుతుంది!

"భగవద్గీత - రోజు శ్లోకం" సభ్యత్వం పొందినందుకు ధన్యవాదాలు!

Get Your Own Gita
Bhagavad Gita — The Song of God

భగవద్గీత
The Song of God

Order Now
Bhagavad Gita for Everyday Living

Bhagavad Gita for Everyday Living

Order Now
What's New in
Holy Bhagavad Gita
  • Redesigned home, verse, and chapters pages
  • Personal accounts — sign in with email, phone, or Google
  • Bookmark verses and save notes on any verse
  • Track your reading progress across all 18 chapters
  • Quick-jump to any verse
  • Full site now available in all 6 languages
  • Overall visual polish and consistency